உள்ளூர் செய்திகள்

நெல்லையில் சினிமா வினியோகஸ்தர் திடீர் சாவு

Published On 2023-01-11 09:19 GMT   |   Update On 2023-01-11 09:19 GMT
  • நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வசந்தம் நகரை சேர்ந்தவர் பாலாஜி(வயது 47). இவர் சினிமா வினியோகஸ்தராக இருந்து வந்தார். இவரது மனைவி இறந்துவிட்டார்.
  • பாலாஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். சமீப காலமாக அவர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

நெல்லை:

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வசந்தம் நகரை சேர்ந்தவர் பாலாஜி(வயது 47). இவர் சினிமா வினியோகஸ்தராக இருந்து வந்தார். இவரது மனைவி இறந்துவிட்டார்.

இவரது ஒரே மகள் திருப்பூரில் உள்ள பாலாஜியின் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து 11-ம் வகுப்பு பயின்று வருகிறாள். இதனால் பாலாஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். சமீப காலமாக அவர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை வீட்டுக்குள் சென்ற அவர் மாலை நேரம் வரையிலும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பாலாஜி வீட்டில் ரத்த வாந்தி எடுத்து இறந்து கிடந்தார்.

உடனே அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News