உள்ளூர் செய்திகள்
பணகுடி இஸ்ரோவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் திடீர் சாவு
- பணகுடி இஸ்ரோவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் திடீரென இறந்தார்.
- திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு சந்திப்பில் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இங்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி(வயது 42) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு அவர் புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவருடன் இஸ்ரோவில் தங்கி இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே பாலாஜி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.