உள்ளூர் செய்திகள்

மாநில போட்டிக்கு தேர்வான மாணவர்கள்.

விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் மாநில கராத்தே போட்டிக்கு தேர்ச்சி

Published On 2023-05-06 08:27 GMT   |   Update On 2023-05-06 08:27 GMT
  • திண்டுக்கல் மாவட்டம் ஆடலூரில் கராத்தே பயிற்சி முகாம் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரை நடைபெற்றது.
  • இதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

விளாத்திகுளம்:

திண்டுக்கல் மாவட்டம் ஆடலூரில் கராத்தே பயிற்சி முகாம் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் தென்மாவட்டங்களில் இருந்து பல்வேறு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியை சேர்ந்த தீபக், மிதுல பிரகதீஸ் சுடலை, அகில், ராமகிருஷ்ண, ரவிசங்கர், ஹர்ஷத்ராஜ் ஆகிய மாணவர்கள் பங்கு பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

முகாமில் தலைமை பயிற்சியாளராக சோபுக்காய் கோஜு ரியு கராத்தே இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் பயிற்சி அளித்தார்.

பயிற்சி முகாமில் பங்கு பெற்று மாநில போட்டிக்கு வெற்றி பெற்ற மாணவர்களை ஶ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியின் முதல்வர் மாயாதேவி மற்றும் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா, பெற்றோர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News