உள்ளூர் செய்திகள்

வயிற்று வலியால் மாணவி திடீர் சாவு

Published On 2022-06-27 07:53 GMT   |   Update On 2022-06-27 07:53 GMT
  • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே வயிற்று வலியால் மாணவி திடீர் பலியானார்.
  • இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்.இவரது மகள் கவிப்பிரியா (வயது 25). இவர் எம்.எஸ்.சி படித்து‌ விட்டு கடந்த 3 வருடங்களாக வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயிற்றுவலிக்காக மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனால் கவிப்பிரியாவிற்கு அதிகமாக வயிற்றுவலி வந்துள்ளது.இது குறித்து அவர் அவரது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக‌ வீட்டிற்கு வந்த அவரது தந்தை கிருஷ்ணன் கவிப்பிரியாவை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவிப்பிரியா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News