உள்ளூர் செய்திகள்
- எதிரே வந்த லாரி மோதியதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸ் சரகம் பாலக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரவணன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற சரவணன் மீது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் விசாரித்து வருகின்றனர்.