உள்ளூர் செய்திகள்
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தெருமுனை கூட்டம்
- பாளை பகுதி 39 மற்றும் 55-வது வார்டு வட்டங்கள் சார்பில் தி.மு.க. தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் கலந்து கொண்டு பேசினார்.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தெருமுனை கூட்டம் பாளை பகுதி 39 மற்றும் 55-வது வார்டு வட்டங்கள் சார்பில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் கலந்து கொண்டு பேசினார். பாளை தியாகராஜநகர் ரெயில்வே கேட், பஸ் நிறுத்தம் பகுதிகளில் நடந்த இந்த நிகழ்ச்சிகளில் மூத்த முன்னோடிகள் சுப்பிர மணியன், சுப சீதாராமன், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, முன்னாள் மாவட்ட பொரு ளாளர் அருண்குமார், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் பலராமன், முன்னாள் கவுன்சிலர் பாலன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமு கராஜா, பேட்டை மணி கண்டன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.