உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டிய காட்சி.

மாநில வினாடி- வினா போட்டி: ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் வெற்றி

Published On 2023-02-02 08:48 GMT   |   Update On 2023-02-02 08:48 GMT
  • நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் மாநில அளவிலான பொருளியல் மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
  • கடந்த ஆண்டும் இதே போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 2-ம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூர்:

நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் மாநில அளவிலான பொருளியல் மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்–வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர்கள் பா.செல்வம் மற்றும் ச.ஞான அபினாஷ் ஆகியோர் கலந்துகொண்டு முதல் பரிசையும், சுழற்கோப்பையையும் தட்டிச் சென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், செயலர் ச.ஜெயக்குமார், பொருளியல் துறை தலைவர் ரமேஷ், வினாடி- வினா போட்டியின் அமைப்பாளர் முத்துக்குமார், வகுப்பு ஆலோசகர் கணேசன் மற்றும் பொருளியல் துறை பேராசிரியர்கள் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

மேலும் கடந்த ஆண்டும் இதே போட்டியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 2-ம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News