உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
- வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கைபத்மாவதி தாயார் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பெண்கள் கலந்து கொண்ட கோலாட்டம் பக்தி பாடல்கள் பஜனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வணிகவைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட தனுஷ்கோடியாபுரம் தெருவில் அமைந்து உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கைபத்மாவதி தாயார் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாலையில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் முன்பு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அலமேலு மங்கை பத்மாவதி தாயார்அலங்கரிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட கோலாட்டம் பக்தி பாடல்கள் பஜனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், மாரிக்கண்ணன், செல்வம், தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.