மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம்
- மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
- எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
சேலம்:
சேலம் நகர மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட வெங்கட்ராவ் ரோட்டில் உள்ள நகர கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர்கள் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
எனவே, குகை, லைன்மேடு, நெத்திமேடு, டவுன், கிச்சிப்பாளையம், களரம்பட்டி, கடைவீதி, தாசநாயக்கன்பட்டி, சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, தில்லைநகர், கோட்டை மற்றும் பொன்னம்மாபேட்டை பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர்கள், இந்த முகாமில் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.
அதற்கான உரிய தொகையை செலுத்தினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெயர் மாற்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு பெயர் மாற்றம் செய்து தரப்படும். மின் இணைப்பின் உரிமையாளர் இறந்துவிட்டால் அவரது பெயரை மாற்ற வேண்டும் என்றால் கூடுதல் ஆவணங்கள் இணைக்க வேண்டும். அதேபோல், மற்ற இனங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்களுக்கு படிவம்-2-ல் மின் இணைப்பு உரிமையாளர் சம்மதக்கடிதம் வேண்டும்.
கூட்டு உரிமையா ளர்களின் சம்மத கடிதம், காப்பு தொகையை மாற்றிக்கொள்ள மின் இணைப்பு உரிமையாளர் சம்மத கடிதம் அளிக்க வேண்டும். சம்மத கடிதம் அளிக்கப்படாவிட்டால் அந்த விண்ணப்பதாரர் புதிதாக காப்புத்தொகை செலுத்த வேண்டும்.
மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ள மின் இணைப்புகள் மற்றும் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படமாட்டாது என்று சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்து உள்ளார்.