உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் அரிமா அமல்ராஜ் வாழ்த்தி பேசிய போது எடுத்த படம்.

சேரன்மகாதேவியில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

Published On 2023-04-10 08:58 GMT   |   Update On 2023-04-10 08:58 GMT
  • ஜமாத் தலைவர் அபுல்ஹசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
  • இப்தார் நிகழ்ச்சியில் முஸ்லிம் ஜமாத்தினர், சர்வ சமயத்தினர் கலந்துகொண்டனர்.

சேரன்மகாதேவி:

சேரன்மகாதேவியில் குத்பா முகைதீன் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஜமாத் தலைவர் அபுல்ஹசன் தலைமை தாங்கினார். செயலர் ஷேக் செய்யது அலி முன்னிலை வகித்தார். இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர் முகம்மது இஸ்ஹாக் ஹுசைன் தொடங்கி வைத்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் கலந்து கொண்டார். இமாம் மீரான்கனி,பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ், சேகரகுரு கிப்சன் ஜான்தாஸ், , அரிமா சங்கத்தினர் முருகேசன், அமல்ராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், முஸ்லிம் ஜமாத்தினர், சர்வ சமயத்தினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை தக்வா பள்ளிவாசல் இமாம் குலாம் முகைதீன் ஜமாலி தொகுத்து வழங்கினார். ஜமாத் துணைச் செயலர் செய்யது அப்பாஸ் வரவேற்றார். இளைஞர் நற்பணி மன்றச் செயலர் இம்தியாஸ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News