உள்ளூர் செய்திகள்
ரூ.2 லட்சம் போதை பொருட்களுடன் சிவகாசி வாலிபர் கைது
- கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் முத்துகிருஷ்ணன் பிடிபட்டார்.
- கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 32). இவர் ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி செல்ல முயன்றார்.
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் முத்துகிருஷ்ணன் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல ஓசூர் டவுன் போலீசார் நடத்திய வேட்டையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த தங்கலிங்கம் (40) என்பவரும் போதை பொருட்களுடன் பிடிபட்டு கைதானார்.