உள்ளூர் செய்திகள்

சிவகிரி அரசு ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் கொண்டாட்டம்

Published On 2023-05-08 08:58 GMT   |   Update On 2023-05-08 08:58 GMT
  • வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கொடியினை தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் ஏற்றினார்.
  • சங்கத்தின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் விரைவில் நிறைவேற்றிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சிவகிரி:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40-வது அமைப்பு தினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக சிவகிரி தாலுகா அலுவலகம், வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகம் ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவரும், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளருமான மாடசாமி தலைமையில் நடைபெற்றது. சிவகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கொடியினை தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் ஏற்றினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் மற்றும் அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவரான கணேசன் சங்கக் கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் மாடசாமி வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமை நில அளவர், மண்டல துணை தாசில்தார், தேர்தல் துணை தாசில்தார், சிவகிரி வருவாய் ஆய்வாளர், கிராம உதவியாளரும் சிவகிரி வட்ட செயலாளருமான அழகுராஜா, வேல்முருகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். வாசுதேவநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் சங்கக் கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் மாடசாமி வட்டக்கிளை தலைவர் கணேசன், வட்டக்கிளை செயலாளர் முனியசாமி, மகளிர் அணி பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் பேசினர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் விரைவில் நிறைவேற்றிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், சங்கத்தை உருவாக்கி கட்டமைக்கப் பாடுபட்ட நிர்வாகிகளின் தியாகங்களைப் போற்றி, அவர்கள் வழியில் சங்கத்தினை திறம்பட வழிநடத்தி, அரசு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்திட உறுதி மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News