உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் திறன் திருவிழா

Published On 2022-07-19 08:49 GMT   |   Update On 2022-07-19 08:49 GMT
  • வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் திறன் திருவிழா நாளை நடக்கிறது.
  • இலவச திறன் பயிற்சியுடன் சிறந்த வேலை வாய்ப்பை பெற்று பயனடையலாம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக, வேலைக்கேற்ற திறன் குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை ஒருங்கே பெறுவதற்கும்,

வேலை வாய்ப்பிற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவதற்கும் மற்றும் திறன் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பினை பெற்றிட அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் இளைஞர் திறன் திருவிழா நாைள (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 4 மணிவரை சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 'இளைஞர் திறன் திருவிழா" நடக்கிறது.

இம்முகாமில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் பங்கு பெற்று வேலைநாடும் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் பொருட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இளைஞர்கள் தங்களின் கல்வித்தகுதி, அடையாள அட்டை, தொழில்நுட்ப தகுதி, சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை, உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட புகைப்பட நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சியுடன் சிறந்த வேலை வாய்ப்பை பெற்று பயனடை யலாம்.

எனவே, வேலை நாடும் இளை ஞர்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்ப டுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கேட்டு கொண்டுள்ளார்.

Tags:    

Similar News