உள்ளூர் செய்திகள்

செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது.

செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் யோகா தின விழா

Published On 2022-06-24 08:27 GMT   |   Update On 2022-06-24 08:27 GMT
  • செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
  • முதல்வர் ராணி போஜன் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.பள்ளியின் தாளாளர் சத்தியன் தலைமை தாங்கினார்.நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன், முன்னாள் துணை ஆணையர் கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் பள்ளியின் கல்வி இயக்குனர் டாக்டர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

காரைக்குடி என்.சி.சி பட்டாலியன் கர்னல் ரஜினீஷ் பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொண்டார்.அவர் பேசுகையில், யோகாவின் சிறப்புகளை பற்றியும்,யோகாவால் உடல் ஆரோக்கியத்தை பராமரித்தல் பற்றியும்,மனநிலையை சீராக்கி பராமரித்தல் பற்றியும் எடுத்துக்கூறினார்.

மாணவர்கள் அனைத்து விதமான யோகாசனஙகளையும் செய்தனர். குறிப்பாக 7-ம் வகுப்பு மாணவன் மாநில அளவிலான யோகா சாம்பியன் யஷ்வந்த் செய்த யோகாசனங்கள் வியப்பில் ஆழ்த்தியது.முதல்வர் ராணி போஜன் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News