உள்ளூர் செய்திகள்

தீபாராதனை

வைகாசி விசாக விழா

Published On 2022-06-13 13:22 IST   |   Update On 2022-06-13 13:22:00 IST
  • பெரியநாச்சி அம்மன்கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் தனிசன்னதியில் வைகாசி விசாக விழா நடந்தது,
  • 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சி வழிவிடு பெரியநாச்சி அம்மன்கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் தனிசன்னதியில் வைகாசி விசாகவிழா நடந்தது. இதில் 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை, அன்னதானமும் மாலையில் கோவிலில் உள்ள காசிவிஸ்வநாதர்-காசிநந்திக்கு பிரதோஷ வழிபாடு, பூஜைகள் நடந்தன.

ஏராளமான பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதேபோல் தாயமங்கலம் ரோட்டில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலிலும், இடைக்காட்டூர் பாலமுருகன், வைகைஆற்றுகரையில் உள்ள சிருங்கேரி சங்கரமடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News