உள்ளூர் செய்திகள்

தேசிய தரவு தளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்

Published On 2022-08-06 08:36 GMT   |   Update On 2022-08-06 08:36 GMT
  • தேசிய தரவு தளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
  • வங்கி கணக்கு புத்தகம் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது-

இந்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கி ணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி 'அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம்"

(National Data Base for UnorganizedWorkers - eSuRAM - NDUW) என்ற ஒரு தரவுதளத்தை உருவாக்கி உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பணியாளர்கள், சிறு, குறு விவசாயிகள், விவசாயக்கூலிகள். குத்தகைதாரர்கள், மகளிர்குழு உறுப்பினர்கள், தேசிய ஊரக வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், லேபிள் மற்றும் பேக்கிங் செய்வோர், கட்டுமான தொழிலாளர்கள், தச்சு வேலை செய்வோர், டீக்கடை ஊழியர்கள். கல்குவாரி தொழிலாளர்கள், உள்ளுர்கூலி தொழிலா ளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், முடி திருத்துவோர், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள். செய்தித்தாள் போடுப வர்கள்.

ஆட்டோ டிரைவர்கள். பட்டுவளர்ப்பு தொழிலா ளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் ஊற்றும் பணியாளர்கள், நெசவாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற 379 வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் விவ ரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இத்தரவு தளத்தில் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வயது 16 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார்அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வங்கி கணக்கு புத்தகம் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இத்தேசிய தரவுதளத்தில் (eSuRAM Portal) அனைவரும் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News