உள்ளூர் செய்திகள்

மூதாட்டியின் வீட்டை உடைத்து கொள்ளை

Published On 2023-09-14 07:21 GMT   |   Update On 2023-09-14 07:21 GMT
  • மூதாட்டியின் வீட்டை உடைத்து 7 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
  • தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ் பெக்டர் மைக்கேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை ஊராட்சி சேண்டல்பெரியான் கிரா மத்தைச் சேர்ந்தவர் கண் ணப்பன் மனைவி கண்ணாத் தாள் (வயது 70). இவர் தேவகோட்டை தினசரி காய்கறி மார்க்கெட்டில் சாலை யோரத்தில் வியாபா ரம் செய்து வருகிறார்.

தினமும் தனது கிரா மத்தில் உள்ள வீட்டில் இருந்து அதிகாலையில் தேவகோட்டை தினசரி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்துவிட்டு மதியம் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள் ளார். நேற்று வழக்கம்போல் காய்கறி விற்பனை செய்ய அதிகாலையில் சென்று விட்டு மதியம் சுமார் 2 மணி அளவில் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப் போது உள்ளே இருந்த இரண்டு பீரோக்களும் உடைத்து பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 7 பவுன் தங்கச் செயின்கள் ரொக்க பணம் ரூ.10,000 ஆகியவை கொள்ளை போயிருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ் பெக்டர் மைக்கேல் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரட்டை கொலை செய்து வீட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தால் தேவகோட்டை மக்கள் அச்சத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் மூதாட்டி வீட்டில் நகை கொள்ளை சம்பவம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News