உள்ளூர் செய்திகள்

போலி மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2022-06-13 07:43 GMT   |   Update On 2022-06-13 07:43 GMT
  • மானாமதுரையில் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம். மானாமதுரை சிப்காட் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முகமது தாரிக் மற்றும் காவலர்கள் சுந்தர், ரமேஷ் ஆகியோர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சுழியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓட்டுநர் கார்த்திகேயன், ஜெயவீரபாண்டியன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தப்பியோடிய மகேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கைதான இருவரிடமும் மதுவிலக்கு தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பாண்டி யன், தலைமை காவலர் மலையரசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News