உள்ளூர் செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-09-27 09:12 GMT   |   Update On 2022-09-27 09:12 GMT
  • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • காவலர்கள் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு விநியோகம் செய்தார். ராம்நகரில் இருந்து ராமேசுவரம் சாலையில் பஸ் நிலையம் வழியாக பேரணி சென்றது. இதில் பங்கேற்றவர்கள் கடவுள் வேடம் அணிந்து தலைக்கவசம் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பேரணியில் போக்குவரத்து காவல்துறை மற்றும் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தனர்.

Tags:    

Similar News