உள்ளூர் செய்திகள்

நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் தி.மு.க வினர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர்.

காரைக்குடியில் அனைத்து கட்சியினர் மரியாதை

Published On 2022-09-17 08:22 GMT   |   Update On 2022-09-17 08:22 GMT
  • அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி காரைக்குடியில் அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
  • தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காரைக்குடி

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணித்தனர். நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ கற்பகம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்தனர்.மாவட்ட பேரவை பாலா, நிர்வாகிகள் திருஞானம், வழக்கறிஞர்கள் ராமனாதன், ஆசைத்தம்பி, தேவகோட்டை ரவிக்குமார், வட்டச் செயலாளர் மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

தி.மு.க சார்பில் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், பொருளாளர் துரைராஜ், நகர்மன்ற கவுன்சிலர்கள் அன்னை மைக்கேல், சொ.கண்ணன், கலா, தெய்வானை இளமாறன், ஹரிதாஸ், கார்த்திகேயன் வட்டச் செயலாளர்கள் விஜயகுமார், ரமேஷ், முகமது கனி, லட்சுமி ராஜ்கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திராவிடர் கழகத்தினர் திராவிட மணி தலைமையில் மரியாதை செலுத்தினர்.தலைமை கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News