உள்ளூர் செய்திகள்

இலவச வீட்டுமனை வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு கொடுக்க வந்தனர்.

இலவச வீட்டுமனை வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு

Published On 2022-06-22 09:53 GMT   |   Update On 2022-06-22 09:53 GMT
  • சிங்கம்புணரியில் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
  • வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்த மக்கள் கடந்த 1 வருடமாக இலவச வீட்டு மனை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

ங்கம்புணரி, ஜூன். 22-

சிவகங்கை மாவட்டம் வடசிங்கம்புணரி விழுப்புனிக்களம், சிலோன் காலனி பகுதிகளில் வசிக்கும் 26 பேர் 2021 ஜூலை மாதம் ஆன்லைன் மூலம் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்தனர். அது சம்பந்தமான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் சர்வதேச உரிமைகள் கழக மாவட்டத் தலைவர் பெரியய்யா என்ற ராஜா தலைமையில் சிங்கம்புணரி தாசில்தாரிடம் மீண்டும் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்த மக்கள் கடந்த 1 வருடமாக இலவச வீட்டு மனை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் துஸ்யந்தன், திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர் அன்பரசன், ஒன்றிய செயலாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News