உள்ளூர் செய்திகள்

முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் முகாம்

Published On 2023-03-19 08:54 GMT   |   Update On 2023-03-19 08:54 GMT
  • முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
  • மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படை பணியாற்றுவோர், அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்குகிறார். இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படை பணியாற்றுவோர், அவர்களை சார்ந்தோர் பங்கேற்று குறைகளை மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News