உள்ளூர் செய்திகள்

தேர்தல் விழிப்புணர்வு பாட்டுப்போட்டி

Published On 2022-11-19 14:08 IST   |   Update On 2022-11-19 14:08:00 IST
  • சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு பாட்டுப்போட்டி நடந்தது.
  • வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பாடல்களை பாடினர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தேர்தல் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு பாட்டுப்போட்டி நடந்தது.

இதில் மாணவிகள் பங்கேற்று தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு, வாக்களிக்க பணம் பெறக்கூடாது, வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பாடல்களை பாடினர். சிறப்பாக பாடல் வரிகள் அமைத்து, பாடிய மாணவிகளின் பெயர்கள் இளையான்குடி வட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளையும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோரையும் முதல்வர் அப்பாஸ் மந்திரி பாராட்டினார்.

Tags:    

Similar News