கோவில் நிலத்தை அபகரிக்க முயன்ற ஊராட்சி கிளார்க் மீது புகார்
- தேவகோட்டை அருகே கோவில் நிலத்தை அபகரிக்க முயன்றதாக ஊராட்சி கிளார்க் மீது புகார் அளிக்கப்பட்டது.
- நடவடிக்கை எடுக்காவிட்டால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இளங்குடி கிராமத்தில் ஊர் மத்தியில் கிராம தெய்வமாக விளங்கும் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முளைப்பாரி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த கிராமத்தில் பஞ்சாயத்து கிளர்க்காக இருப்பவர் சித்ரா (வயது40) இவரது வீடு கோவில் அருகே உள்ளது. இவர் தனது வீட்டின் செப்டிக் டேங்க் அமைக்க வேறு பகுதியில் இடமிருந்தும் அங்கு அமைக்காமல் கிராமக் கோவிலுக்கு எதிரில் உள்ள கோவில் நிலத்தில் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திருவேம்பத்தூர் போலீஸ் நிலையத்திலும், தேவகோட்டை கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதில், சித்ரா கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும், சர்சைக்குரிய இடத்தில் சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் சர்வே செய்து அந்த இடத்தை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.இதையும் மீறி அவர் செப்டிக் டேங்க் அமைக்க முயற்சி செய்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஊராட்சி கிளார்க் சித்ரா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று தெரி வித்தனர்.