உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவிகள் சந்திப்பு

Published On 2022-08-02 08:46 GMT   |   Update On 2022-08-02 08:46 GMT
  • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்தித்து பள்ளி அனுபவங்களையும், குடும்ப வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
  • இந்த நிகழ்வில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி தற்போது சிவகங்கை வட்டாட்சியராகவும், திருச்சியில் மருத்துவராக உள்ள சுஜா ஜெயமலர் உள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1982-89 வரை மாணவிகளாக படித்தவர்கள் ஒன்று கூடினர். இதை கொண்டாடும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளி அனுபவங்களையும், குடும்ப வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இதில் பலர் அரசு அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிகழ்வை பள்ளியில் படித்த முன்னாள் மாணவியும் தற்போது சிவகங்கை வட்டாட்சியராகவும் உள்ள ஜெயந்தி, திருச்சியில் மருத்துவராக உள்ள சுஜா ஜெயமலர், மதுரை ரெய்சல் செல்வி, குழந்தைராணி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

Tags:    

Similar News