உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நகர்மன்றத்தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது. 

அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு-ரெயில் மறியல் போராட்டம்

Published On 2023-09-14 07:20 GMT   |   Update On 2023-09-14 07:20 GMT
  • சிவகங்கையில் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு-ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகங்கை

சிவகங்கையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொதுநல அமைப்பினர், கவுன்சி லர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ரெயில்வே கோரிக்கைகள் தொடர்பாக 30 ஆண்டு களாக மனு கொடுத்தும் ரெயில்வே நிர்வாகம் அதனை நிறைவேற்ற செவி சாய்க்காமல் உள்ளது. மாவட்டத்தின் தலைநகராக உள்ள சிவகங்கையை கடந்து செல்லும் 11 ரெயில் களில் ஒரு சிலவற்றை தவிர மற்ற ரெயில்கள் நிலையத் தில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

சிவகங்கை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்குடி வரை மட்டும் இயக்கப்பட்டு வரும் பல்லவன் ரெயிலை சிவகங்கை, மானாமதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தியும் ரெயில்வே நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை.

இதை கண்டித்தும், ரெயில்வே தொடர்பான கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், சிவகங்கை நகரில் வருகிற 23-ந்தே தி சனி க்கி ழமை அனை த்துக் கட்சி சார்பில் கடை யடைப்பு போராட்டம், ரெயில் மறியல் நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்ப ட்டது. இதற்கு வர்த்தக சங்கத்தினர், வியா பாரிகள், பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News