உள்ளூர் செய்திகள்

சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தொடங்கி வைத்தார். அருகில் கவுன்சிலர் தாயுமானவன் உள்ளார்.

சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் 18 மாணவ-மாணவிகள் தேர்வு

Published On 2022-07-24 07:07 GMT   |   Update On 2022-07-24 07:09 GMT
  • வட்டார அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் 18 மாணவ-மாணவிகள் தேர்வு நடந்தது.
  • இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியை மற்றும் கவுன்சிலர் தாயுமானவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 44-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. வட்டார அளவில் நடை பெற்ற இப்போட்டியில் 6 மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும், 7 உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும், 13 நடுநிலைப்பள்ளி உள்பட 26 அரசுப்பள்ளிகளை சேர்ந்த 64 மாணவர்கள், 51 மாணவிகள் பங்கேற்றனர்.

சதுரங்க ஒலிம்பியாட் போட்டியினை சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு 3 பிரிவு களாவும், மாணவிகளுக்கு 3 பிரிவுகளாகவும் போட்டி நடைபெற்றது.

இதில் தேர்வான 18 மாணவ-மாணவிகளும் சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியை மற்றும் கவுன்சிலர் தாயுமானவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News