கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தொடங்கி வைத்த காட்சி.
கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
- தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
- ஒவ்வொரு ஆண்டும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும் தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமைத் தொழிலாளர் முறை தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்க ளிடையே ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைக்குழு பிரச்சாரத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் திருநந்தன், அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.