என் மலர்
நீங்கள் தேடியது "autograph movement"
- தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
- ஒவ்வொரு ஆண்டும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும் தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமைத் தொழிலாளர் முறை தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்க ளிடையே ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைக்குழு பிரச்சாரத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் திருநந்தன், அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சேலம் தெய்வீக தமிழ்சங்கம் அறக்கட்டளை சார்பாக 1 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
- தொடக்க விழாசேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் அருகே உள்ள ஹோட்டல் சாய் விஹாரில் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உற்பத்தியாகி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கும் புனித நதியான திருமணி முத்தாற்றை பாதுகாக்க வேண்டி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், சேலம் தெய்வீக தமிழ்சங்கம் அறக்கட்டளை சார்பாக 1 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழாசேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் அருகே உள்ள ஹோட்டல் சாய் விஹாரில் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முருகேச பூபதி, முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மோகன், ராசி கே.சரவணன், தியாகராஜன், என்.ஸ்ரீதர், ஆறுமுக உடையார், முருகன், ஜெய்சந்த் லோடா, ஓ டெக்ஸ் இளங்கோவன், டாக்டர் பி.எஸ்.பன்னீர்செல்வம், கவிஞர் பொன்னுரங்கன், பா.மா.ஆறுமுகம், ஸ்ரீஇராமன், லக்ஷ்மன் குமார் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செம்முனி, டாக்டர் சந்திரசேகர், தெய்வீக தமிழ்சங்க தலைவர் ராமன், பொருளாளர் ஸ்ரீதர், டாக்டர் கே.குமாரசாமி ஆகியோர் செய்துள்ளனர்.
- நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
- கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப் போவ தாக, கடந்த சில நாட்களாக அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப் போவ தாக, கடந்த சில நாட்களாக அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்துள்ளனர்.
இதைக்கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கடந்த வாரம், கல்லூரிக்குள் அமைந்துள்ள, திருவள்ளுவர் சிலை முன்பு மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி முதல்வர், மாணவ-மாணவிகளின் கோரிக்கைகள் குறித்து, உயர்கல்வித்துறை அதிகாரி களிடம் சொல்கிறோம் என்று கூறினார்.
அப்போது போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது. இந்த நிலையில் நேற்று திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில், கல்லூரி விளை யாட்டு மைதானத்தில் அமைக்க இருக்கும் தொழில்நுட்ப பூங்காவினை மாற்று இடத்தில் அமைக்க கோரியும், கல்லூரி விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க கோரியும் சங்க நிர்வாகி யாழினிபிரியா தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் மாவட்டத் தலைவர் தங்கராஜ் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். பின்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் முயற்சியினை கைவிட்டு மாற்று இடத்தில் அமைக்கக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
- ராமநாதபுரத்தில் ம.தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
- இதனை மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்ட மன்றத்தின் செயல்பாடுகளுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுகிறார். அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக பேசி வருகிறார்.
அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவிப் பிரமாணத்தை ஆளுநர் ரவி மீறி வருகிறார். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
அதனை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 29-வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவியை பொறுப்பில் இருந்து அகற்றக்கோரி கையெழுத்து இயக்க நிகழ்ச்சி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வழிகாட்டுதலின் படி, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆலோச னையின்படி ராமநாதபுரம மாவட்ட ம.தி.மு.க சார்பில் அரண்மனை முன்பு காலை கையெழுத்து இயக்கம் நடந்தது. இதனை மாவட் செயலாளர் வி.கே.சுரேஷ் தொடங்கி வைத்து பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் பிரகாஷம் தலைமை வகித்தார். மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் குணா, முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக், மாநில இளைஞரணி துணைச்்செயலாளர் கராத்தே பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் வைண்டிங் சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் சரவணன், பாஸ்கரன், பிச்சை சுகநாதன், மங்க ளேசுவரி முத்துக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், சடாச்சரம், பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் ஹக்,நித்தியானந்த்,சத்தியேந்திரன்,மனோகரன்,கெவிக்குமார், சந்திரன், டைசன், குத்புதீன், ஞானப்பிரகாசம், நகரச்செயலாளர்கள் சங்கு துரை (கீழக்கரை).
பிச்சை மணி (பரமக்குடி), வெள்ளைச்சாமி (ராமேசுவரம்),ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல் (கமுதி),ஜோதி (மண்டபம் மேற்கு), லூக்காஸ் (மண்ட பம் கிழக்கு), உதயசூரியன் (நயினார் கோவில்), உதயக் குமார் (பரமக்குடி), நாக பாண்டி (கமுதி), நாகராஜ் (சாயல்குடி),சிங்கார செல்வம் (திருவாடானை கிழக்கு),வேலுச்சாமி (முதுகுளத்தூர்), பாண்டித்துரை (ராஜசிங்கமங்கலம்).
பிர்தௌஸ்கான் (ராமநாதபுரம்),ஜெகதீஸ் பாண்டியன் (போகலூர்), இளையராஜா (திருப்புல்லாணி), மாநில தொண்டரணி துணைச் செயலாளர் முனியராஜ், விவசாய அணி துணைச் செயலாளர் முருகேச பாண்டியன், திருப்புல்லாணி செல்வராஜ்,மாணவரணி துணைச்செயலாளர் பாலகணேஷ், நெசவாளர் அணி துணைச்செயலாளர் சீனிவாசன்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளர் எம்.சி வெற்றிவேல், திருவாடானை நூருல் ஹசன்,முதுகுளத்தூர் வழிவிட்டான்,ஒன்றிய பொருளாளர் செய்யது இபுறாம்ஷா,கவியரசன்,சிவசுந்தர்,மாதவன்,முகம்மது அப்துல் ஹக்,வல்லக்குளம் தாஜீதீன், மண்டபம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் ஜேம்ஸ், உச்சிப்புளி வேலுச் சாமி, தங்கச்சி மடம் ஜோசப் தாஸ்,கமுதி சரத்குமார்,பரமக்குடி பாலகிருஷ்ணன்.
கூட்டணி கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் கோபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின்,பி.ஐ.சி.எம் தாலுகா செயலாளர் செல்வராஜ், திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் அண்ணா ரவி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன், மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார், மாவட்ட துணைச்செயலாளர் சுரேஷ், எஸ்.டி.பி.ஐ அப்துல் ஜமீல், நஜ்முதீன்,பெரியார் பேரவை நாகேஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முடிவில் பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் நன்றி கூறினார்.






