உள்ளூர் செய்திகள்

பீளேமேட்டில் நடைமேடையில் புதர்கள் அகற்றம்

Published On 2023-02-22 09:34 GMT   |   Update On 2023-02-22 09:34 GMT
  • 300 அடி தூரம் முள் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது.
  • செடி, கொடிகளை அகற்றி நடை மேடையை சீரமைக்க வேண்டும்

கோவை,

பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் இருந்து அவினாசி சாலை செல்லும் வழியில் டைடல் பார்க் அமைந்துள்ளது. இந்த டைடல் பார்க் அமைந்துள்ள இடத்தில் இருந்து அவினாசி சாலை செல்லும் வழியில் சுமார் 300 அடி தூரம் முள் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது. இதனால் இங்கு மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது.இதனால் செடி, கொடிகளை அகற்றி நடை மேடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதை ஏற்று மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஜே.சி.பி. எந்திரம் மூலம் அங்கிருந்த புல், புதர்களை அகற்றி சீரமைத்தனர். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.  

Tags:    

Similar News