உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் தி.மு.க நகர செயலாளர் நவநீத பாண்டியனுக்கு கேடயம் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.


ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு நிலம் தானமாக வழங்கிய தி.மு.க செயலாளருக்கு கேடயம் பரிசு

Published On 2022-07-01 14:25 IST   |   Update On 2022-07-01 14:25:00 IST
  • ஏ.கே.நவநீத பாண்டியன் தனக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை பேரூராட்சிக்கு நன்கொடையாக வழங்கினார்.
  • நேற்று நடந்த பேரூராட்சி மன்ற கூட்டத்தில்ஏ.கே.நவநீத பாண்டியனுக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆறுமுகநேரி பேரூராட்சியின் பயன்பாட்டிற்காக நிலம் தேவைப்பட்டது. இதற்காக நகர தி.மு.க செயலாளரான ஏ.கே.நவநீத பாண்டியன் தனக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை பேரூராட்சிக்கு நன்கொடையாக வழங்கி பத்திர பதிவு செய்து கொடுத்தார். இதனை பாராட்டி அவருக்கு நேற்று நடந்த பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News