உள்ளூர் செய்திகள்

கைதான சாமுவேல் செல்லதுரை.

மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

Published On 2022-11-29 13:53 IST   |   Update On 2022-11-29 13:53:00 IST
  • பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
  • தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை. தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை.

சீர்காழி:

சீர்காழி அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இங்கு தலைமை ஆசிரி யராக சாமுவேல் செல்ல துரை பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியில் 54 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 104 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர்சா முவேல் செல்லதுரை பள்ளியின் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்க ப்பட்ட மாணவி ஒருவரின் பெ ற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா (பொறுப்பு) மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News