உள்ளூர் செய்திகள்

கழிவு மண் வெட்டி கடத்திய வாகனங்கள் பறிமுதல்

Published On 2022-09-25 07:57 GMT   |   Update On 2022-09-25 07:57 GMT
  • கழிவு மண் வெட்டி கடத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றனர்.

கடலூர்:

பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை சேர்ந்த வர்கள் வெங்கட்ராமன், செங்கமலம். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் நெடுஞ்சாலைத்துறை பணி முடிந்து காலி செய்த இடத்தில் இருந்த கழிவு மண்ணை எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றனர்.  தகவல் அறிந்த கடலூர் கனிமவளம் வருவாய் ஆய்வாளர் வேனுநாதன், பண்ருட்டி வட்டாட்சியர் சிவா. கார்த்திகேயன் ஆகியோர் அங்கு விரைந்தனர். அப்போது 2 ஜே.பி.பி. எந்திரங்கள், மற்றும் 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News