உள்ளூர் செய்திகள்

சீமான்

குடும்ப தலைவிகளுக்கு வழங்க நிதி இல்லாதபோது, மாணவிகளுக்கு மட்டும் 1000 ரூபாய் எப்படி வழங்க முடிகிறது? - சீமான் கேள்வி

Published On 2022-09-05 17:05 GMT   |   Update On 2022-09-05 17:05 GMT
  • ராகுல் காந்தி நடைபயணத்தால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றார் சீமான்.
  • தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தமிழ்நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என்றார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவருடைய மகனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், பச்சரிசி மற்றும் வெல்லம் ஆகியவை துலாபாரத்திற்கு கொடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினார். அதன்பின் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். அரசு சட்டம் இயற்றினால் மட்டும் போதாது, அதை செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதைவிட தமிழ்நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும்.

ராகுல் காந்தியின் நடைபயணம் அவரது உடலுக்கும், தொண்டர்களுக்கும் புத்துணர்வை தருமே தவிர, மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாகக்கூறி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியவில்லை என தெரிவித்த தமிழக அரசு, தற்போது மாணவ-மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது ஏன்? கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் வாக்குகளை தனது பக்கம் திருப்புவதற்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News