உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரத்தில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
- மாணவர்கள் சார்பில் ‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தொடங்கி வைத்தார்.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் 'வேண்டாம் போதை' விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.