உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் 9-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்

Published On 2022-07-22 12:17 IST   |   Update On 2022-07-22 12:17:00 IST
  • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
  • மாணவி பாக்கியலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர், திருமங்கை ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது 14). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை மாணவி பாக்கியலட்சுமி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் கழிவறைக்கு சென்ற அவர் மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பாக்கியலட்சுமியை மீட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி பாக்கியலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News