உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலருமான பீலா ராஜேஸ், கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலகர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் அறிவித்துள்ள திட்டங்கள் சீராக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் -கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் அறிவுரை

Published On 2022-11-30 15:16 IST   |   Update On 2022-11-30 15:16:00 IST
  • அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
  • திட்டங்கள் அனைத்து பகுதி மக்களுக்கு ஒரே சீரான வகையில் சென்றவடைவதை உறுதி செய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசின் முதன்மை செயலாளருமான (நிலச்சீர்திருத்தம்) டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கடந்த 27.10.2022 அன்று நடந்த ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் பேசியதாவது:-

இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதே போல வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக துறை வாரியாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள ப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் அறிவித்துள்ள முன்னோடி திட்டங்கள் அனைத்து பகுதி மக்களுக்கு ஒரே சீரான வகையில் சென்றவடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, வருவாய் துறையில் 2 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் பதிவேடுகள் தணிக்கை குறித்து வருவாய் துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆலோசனை நடத்தினார். மேலும் பதிவேடுகளை பார்வையிட்டார். 

Tags:    

Similar News