உள்ளூர் செய்திகள்
சூளகிரியில் வானம் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதை படத்தில் காணலாம்.
- இன்று காலை முதல் சில பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.
- பெய்த மழையால் ஏரி, குளங்கள் மற்றும் அணை பகுதிகளில் மழைநீர் வரத்து அதிகரித்து வருகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்று வட்டாரமான பேரிகை, காளிங்காவரம், அத்தி முகம், சிம்பல் திராடி, மாரண்டப்பள்ளி, மைதாண்டப்பள்ளி, அத்திமுகம், காமன்தொட்டி, உத்தனப்பள்ளி , உலகம், சென்னப்பள்ளி, மேலுமலை, வேம்பள்ளி ஆகிய இடங்களில் சில வாரங்களாக கன முதல் லேசான மழை பெய்து வருகிறது.
இன்று காலை முதல் சில பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து பெய்தது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஏரி, குளங்கள் மற்றும் அணை பகுதிகளில் மழைநீர் வரத்து அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சி நிலவி வருகிறது.