சேலத்தில் வரத்து அதிகரிப்பால் சாத்துக்குடி கிலோ ரூ.50 ஆக சரிந்தது
- கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது.
- இதன் காரணமாக அங்கிருந்து நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 டன் சாத்துக்குடி சேலம் மாவட்டத்துக்கு விற்பனைக்கு வருகிறது.
சேலம்:
ஆந்திரா கடப்பா, நந்திமண்டல் உள்பட பல இடங்களில் சாத்துக்குடி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் சாத்துக்குடி இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சாத்துக்குடி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 டன் சாத்துக்குடி சேலம் மாவட்டத்துக்கு விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் சாத்துக்குடியை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
சாத்துக்குடி வரத்து அதிகரிப்பால் சேலம் மாநகரில் விலை சரிந்துள்ளது. கடந்த கோடையில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.70 முதல் ரூ.100க்கு விற்றது. தற்போது வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30 முதல் ரூ.50 என சரிந்துள்ளது. விலை சரிந்துள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.