உள்ளூர் செய்திகள்

அம்பாள் அலங்கார கோலத்தில் வீதி உலா வலம் வந்த போது எடுத்த படம்.

சாத்தான்குளம் அழகம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-02-02 08:44 GMT   |   Update On 2023-02-02 08:44 GMT
  • சாத்தான்குளம் அழகம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா 5 நாட்கள் நடந்தது.
  • அழகம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அழகு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அழகம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா 5 நாட்கள் நடந்தது. முதல் நாள் கோ பூஜைகளும் பிர ம்மச்சாரி பூஜைகளும், இரவு கிராம சாந்தி தீபாராதனை நிகழ்ச்சியும், 2-ம் நாள் அன்று காலையில் தீபாராதனைகளும், இரவு ஏழு மணிக்கு கும்ப அலங்காரம் , மங்கல இசை தேவாரம், விஷேச சாந்தி சூரிய பூஜைகளும் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதிகாலை 3 மணிக்கு ரட்சாபந்தனன் பரிசோதி நாடி நந்தனம், பரிவார மூர்த்தி பூர்ண கோரி யாத்திர தனமும் மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார விமானம மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். இதைப்போல் அழகம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அழகு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இரவில் அம்மாள் அலங்கார தோற்றத்தோடு சப்பரப்பவனி நடந்தது. மெயின் ரோடு வழியாக செண்டா மேளத்தோடு காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் ஆலயம் சேர்ந்து பின் அழகம்மன் கோவில் தெரு வழியாக ஆலயம் வந்து சேர்ந்தது. இதனை யொட்டி இரவில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் சண்டிகேஸ்வரி பைரவ பூஜைகளும் தீபாராதனைகளும் மங்கல ஆரத்தியும் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.

Tags:    

Similar News