உள்ளூர் செய்திகள்

உழவர் சந்தை கட்டுமானப்பணி நடைபெற்றுவருவதை படத்தில் காணலாம்.

வாழப்பாடியில் உழவர் சந்தை கட்டுமானப்பணி தொடக்கம்

Published On 2023-08-11 07:13 GMT   |   Update On 2023-08-11 07:13 GMT
  • நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள்,
  • பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

வாழப்பாடி:

வாழப்பாடி பகுதி கிரா மங்களில் விளை விக்கப்ப டும் தக்காளி, தேங்காய் உள்ளிட்ட அனைத்து ரக காய்கறிகள், வாழைத்தார் மற்றும் பல்வேறு வகையான பூக்கள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை வாழப்பாடியில் இயங்கும் தனியார் ஏல மண்டிகளிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.

எனவே விவசாயிகள் அன்றாடம் அறுவடை செய்யும் காய்கறிகளை , நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வாழப்பாடி யில் உழவர் சந்தை அமைக்க முன் வந்தது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வந்து செல்வதற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வாழப்பாடியில் பல இடங்களை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குழுவினர் பார்வையிட்ட னர். இறுதியாக, வாழப்பாடி கிழக்கு பள்ளக்காடு பகுதி யில் கடலுார் சாலையில் தனியார் பள்ளிக்கு அருகிலுள்ள அரசு பாதை புறம்போக்கு நிலத்தில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

இதற்கு வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித்துறை இசைவு தெரி வித்ததால், கட்டுமானப்பணி களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து, வாழப்பாடியில் உழவர் சந்தை கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் தொடங்கி யுள்ளது. இதனால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், நுகர்வோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உழவர் சந்தை அமைப்ப தற்கு வழிவகை செய்த முன்னாள் எம்.எல்.ஏ.

எஸ்.ஆர்.சிவலிங்கம், வட்டார ஆத்மா குழு தலை வர் எஸ்.சி. சக்கரவர்த்தி, பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மே கம், வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கும், விவ சாயிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.  

Tags:    

Similar News