உள்ளூர் செய்திகள்

தொழிலாளி ரமேசை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வந்த காட்சி.

ஏற்காடு 60 அடி பாலம் அருகே 100 அடி பள்ளத்தில் தவறிவிழுந்த தொழிலாளி

Published On 2023-05-31 09:24 GMT   |   Update On 2023-05-31 09:24 GMT
  • சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், நேற்று ஏற்காட்டிற்கு சென்றார்.
  • ஏற்காடு மலைப் பாதையின் உள்ள 60 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.

ஏற்காடு:

சேலம் சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், நேற்று ஏற்காட்டிற்கு சென்றார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சேலம் திரும்பி கொண்டிருந்தார்.

ஏற்காடு மலைப் பாதையின் உள்ள 60 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.

இந்த நிலையில் இன்று காலை, நடைபயிற்சிக்கு வந்த சிலர், ரமேஷை பார்த்து, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ரமேஷை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.

பள்ளத்தில் விழுந்ததில் அவருக்கு இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News