உள்ளூர் செய்திகள்

சேலத்தில் வட்டார கல்வி அலுவலர்களுக்கு எழுத்து தேர்வு

Published On 2023-09-10 07:40 GMT   |   Update On 2023-09-10 07:40 GMT
  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்ட அளவில் 2433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
  • இதற்காக மொத்தம் 122 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

சேலம்:

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 33 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு சேலத்தில் 7 மையங்களில் நடைபெறுகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்ட அளவில் 2433 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக மொத்தம் 122 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதேபோன்று யூ.பி.எஸ்.சி உதவித்தொகை முதல் நிலை தேர்வு சேலம் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெறுகின்றன. இந்த தேர்வில் பங்கேற்க 2175 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஓ.எம்.ஆர். வினாத்தாள் மூலம் நடைபெறும் இந்த 2 தேர்வுகளிலும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி தேர்வு அறைக்குள் வரவேண்டும். தேர்வு எழுதும் போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News