உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்படும் அலுவலகம்.

சேலம், நாமக்கல் மாவட்டத்தில்ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது

Published On 2023-09-13 08:04 GMT   |   Update On 2023-09-13 08:04 GMT
  • காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடன டியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டு வருகிறது.
  • இன்று( 13-ந் தேதி) முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத் தினர் அறிவித்திருந்தனர்.

சேலம்:

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடன டியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இன்று( 13-ந் தேதி) முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத் தினர் அறிவித்திருந்தனர்.

வேலை நிறுத்தம்

அதன்படி தமிழகம் முழு வதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணியை

புறக்கணித்து இன்று போராட்டத்தை தொடங்கி னர். இந்த போராட்டத்தில் சேலம் புறநகர் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய அலுல வலகங்களில் பணிபுரியும் 650 பேர் கலெக்டர் அலு வலகத்தில் பணிபுரியும் 150 ஊழியர்கள் என மொத்தம் 800-க்கும் மேற்பட்ட ஊழி யர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் கிராமங்களில் குடிநீர் வினியோகம் மற்றும் ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை அரசு உட னடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோரிக்கைகள்

மேலும் இந்த போராட்டத்தில் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்பட அனைத்து உரிமை களையும் ஊராட்சி செயலா ளருக்கு வழங்க வேண்டும், ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன் முறைபடுத்த வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றி யங்களை பிரிக்க வேண்டும் என வலியுறுத்தி வரு கிறார்கள்.

இன்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக நாளை( 14-ந் தேதி) வட்டார தலைநக ரங்களில் ஆர்ப்பாட்டமும், 19-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தவும், 22-ந் தேதி சென்னையில் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்த போவ தாகவும் கூறி இருந்தனர்.

ஆலோசனை

இதற்கிடையே இன்று காலை ஊரக வளர்ச்சி துறை யினர் அந்தந்த மாவட்டத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளனர். அந்த கூட்டத்தில் இந்த போராட்டத்தை தொடர்வதா அல்லது ஒத்தி வைத்து சில நாட்கள் கழிதது மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதா? என்று முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி துறை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்

இேத கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழி யர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News