உள்ளூர் செய்திகள்

பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

Published On 2023-10-28 09:38 GMT   |   Update On 2023-10-28 09:38 GMT
  • ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது முக்கிய நிகழ்வாக உள்ளது.
  • அதன்படி நடப்பாண் டிற்கான அன்னாபிஷேக விழா இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கிறது.

சேலம்:

ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது முக்கிய நிகழ்வாக உள்ளது. அதன்படி நடப்பாண் டிற்கான அன்னாபிஷேக விழா இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கிறது. பிரசித்தி பெற்ற சேலம் டவுன் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று மாலை அன்னா பிஷேகம் நடக்கிறது. முன்னதாக சுகவ னேஸ்வரர், சொர்ணாம்பிக்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் அரிசி சாப்பாடு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றால் சுகவனேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் பக்தர்களின் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படு கிறது. இதனிடையே இன்று நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திரகிரணம் நிகழ்கிறது. இதனால் சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் முடிந்தவுடன் இரவு 8.30 மணிக்கு கோவில் நடை சாற்றப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனும திக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News