உள்ளூர் செய்திகள்

சிறுதானிய ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணி

Published On 2023-10-28 12:48 IST   |   Update On 2023-10-28 12:48:00 IST
  • தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் சிறுதானிய உணவு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பேரணி தாரமங்கலத்தில் நடைபெற்றது.
  • நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும், விளைச்சலை அதிகப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இது தொடர்பான வாகன பேரணியும் நடத்தப்பட்டது.

தாரமங்கலம்:

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் சிறுதானிய உணவு ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகன பேரணி தாரமங்கலத்தில் நடைபெற்றது.

விழிப்புணர்வு

ராகி, கம்பு, சோளம் குதிரைவாலி, திணை, சாமை உள்ளிட்ட சிறுதானிய உணவு வகைகளை பயிரிடுவதில் உள்ள தொழில் நுட்பங்கள், அதனை நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்துவது குறித்தும், விளைச்சலை அதிகப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இது தொடர்பான வாகன பேரணியும் நடத்தப்பட்டது.

இதில் விவசாயிகள் சிறுதானிய உணவு வகை பயிர்களை நன்கு பராமரிக்க நுனி கிள்ளுதல், யூரியா பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் கஜேந்திரன், வேளாண்மை உதவி அலுவலர் கோபி, வேளாண் அலுவலர்கள் சதீஷ் பாபு. செல்வி, தில்லைக்கரசி, தொழில்நுட்ப மேலாளர் அகிலா மற்றும் விவசாயிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News