உள்ளூர் செய்திகள்
சேலம் லைன்மேட்டில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
- கலந்துரையாடல் கூட்டம் அன்ன தானப்பட்டி லைன்மேட்டில் உள்ள மாநகர காவலர் சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது.
- திரளான போலீசார், விழாக் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
அன்னதானப்பட்டி:
வருகிற 18- ந் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் மற்றும் போலீசார் இடையிலான கலந்துரையாடல் கூட்டம் அன்ன தானப்பட்டி லைன்மேட்டில் உள்ள மாநகர காவலர் சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது.
இதில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் விழா அமைப்பாளர்கள் மற்றும் குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கமிஷனர் வழங்கினார். இதில் திரளான போலீசார், விழாக் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.