உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அருகே குப்பை கிடங்கில் தீ விபத்து

Published On 2023-08-09 12:23 IST   |   Update On 2023-08-09 12:23:00 IST
  • தொட்டில்பட்டி அனல் மின் நிலைய சாலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை களில் உள்ள குப்பைகளை சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
  • மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மளமளவென குப்பை எறிய தொடங்கியது.

மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டி அனல் மின் நிலைய சாலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை களில் உள்ள குப்பைகளை சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.

இதில் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மளமளவென குப்பை எறிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மேட்டூர் தீயணைப்பு த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு தீயணைப்பு நிலை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதியில் புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டனர்.

Tags:    

Similar News