உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் மீண்டும் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு

Published On 2023-07-12 09:48 GMT   |   Update On 2023-07-12 09:48 GMT
  • கொரோனா தொற்று தொடங்கியதால் பயோமெட்ரி எந்திரம் மூலம் கொரோனா பரவும் என்பதால் பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.
  • இந்த நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை, அனைத்து வகை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவை பிறப்பித்துள் ளது.

சேலம்:

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளி லும் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

2020-ம் ஆண்டு மார்ச் இறுதியில், கொரோனா தொற்று தொடங்கியதால் பயோமெட்ரி எந்திரம் மூலம் கொரோனா பரவும் என்பதால் பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை, அனைத்து வகை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவை பிறப்பித்துள் ளது. . அதில் 3½ வருடங்க ளுக்கு முன்னர் பள்ளி களுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் எந்திரங்கள் எத்தனை? அதில் எத்தனை இயங்குகின்றன? எத்தனை இயங்கவில்லை? என்ற விவரத்தை அவசரமாக கேட்டுள்ளது.

கேட்ட சில மணி நேரங்க ளிலே பயோமெட்ரிக் எந்திரங்களை அந்தந்த கல்வி அலுவலர்கள் பெற்று மாவட்ட அலுவலகங்களில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக முழு வதும் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப் பட்டதால் தற்போது பள்ளி களில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரி யர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதை சென்னையில் இருந்தபடி கண்காணிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

Similar News