கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான2-ம் கட்ட பதிவு இன்று தொடங்கியது
- சேலம் மாவட்டத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
- தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.
டோக்கன் விநியோகம்
இதற்காக கடந்த 20-ந் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இதில் 4 லட்சத்து 74 ஆயிரத்து 696 கார்டுகளுக்கு டோக்கன், விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்திற் கான முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
4 லட்சம் விண்ணப்பங்கள்
இதையடுத்து பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலர்களுக்கு வழங்கப் பட்ட மொபைலில் உள்ள
செயலியில் பதிவேற்றப்பட் டது. அதன்படி முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாமின் கடைசி நாளான நேற்று மாலை வரை சேலம் மாவட்டத்தில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 657 பேரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்கள் பெறப்பட்டு பதியப்பட்டுள்ளன.
2-ம் கட்ட பதிவு
2-ம் கட்ட விண்ணப்
பதிவிற்காக ஏற்கனவே விண்ணப்பம் மற்றும்
டோக்கன்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பதிவு செய்யும் முகாம் இன்று காலை தொடங்கியது. 800-க்கும் மேற்பட்ட முகாம்களில் இந்த விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.
ஆர்வத்துடன்
நீண்ட வரிசையில் பெண்கள் ஆர்வத்துடன் காத்து நின்று விண்ணப்பங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதற்குள் 4 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.